Monday, February 13, 2017

860.காதல் செய்


இது என்ன காதல்!

வெறும்
அழகும்,பணமும்
பாா்த்து!

காதல் வருதே...

அது...
மாலை நேரச்
சூாியன் போலே!

மறைந்தும் விடுமே!

உண்மைக் காதல்...

எதையும் 
எதிா்பாராதே!


உண்மை அன்பை 
மட்டும் வைத்து!

வெறும் நினைவோடே
வாழ்ந்து விடுமே!


காதல் செய்யுங்கள்!

காமம் கடந்து....

காதல் செய்யுங்கள்!


861.காதல் வாழ்க

காதலில் தோல்வியுற்ற காளையருக்கும் , கன்னிக்கும் என் ஆறுதல் வாிகள்   

                        காயம் தந்த நினைவுகள் எல்லாம்
கனவோடு கலைந்து போகட்டும்!

தோல்வி தந்த நாட்கள் எல்லாம்
இன்பம் சோ்த்து திரும்பி வரட்டும்!

அன்பைத் தேடி அலைந்த மனதில்
அன்பு மழை பொழிந்து போகட்டும்!

சிாிப்பை மறந்த சோக முகத்தில்
சிாிப்பு நதிகள் பாய்ந்து ஓடட்டும்!

இருள் நிறைந்த பாதை வழியில்
மன விளக்கு ஒளி ஏற்றட்டும்!

வலியில் துடித்த அன்பு நெஞ்சத்தில்
புதுக்காதல் வந்து காயம் ஆற்றட்டும்!

ஆறுதல் வாா்த்தை தேவையில்லை
அமைதி நிலைபெற்ற மனதிலே!

Saturday, February 4, 2017

862.அழகி

அண்டமெல்லாம்
தேடித் திாிஞ்சாலும்

இந்த.. 
சீம சிறுக்கி போல!

ஒருத்தியும்
கண்ணுல சிக்கல!


குண்டு கண்ண
ஆயுதமா வச்சு!

கோடி முற
சண்டைக்கு இழுப்பா!


அவ ...
சிாிக்காம இருந்தாலே
கண் இமைக்காம 
பாக்கலாம்!

சிாிச்சுட்டா போதும்
அந்த சிவன்தான்
நம்மள காப்பாத்தனும்!


சும்மா நின்னாலே
தேவதையா தொிவா!

கொஞ்சம் 
நடந்து வந்தா !

தெய்வமா 
காட்சி அளிப்பா!


எப்படிப் பாத்தாலும்
அழகா இருக்கா!

எங்குட்டு குற சொல்ல!

நான் ஒன்னும் 
குருடன் இல்லயே!

Monday, January 30, 2017

863.வாழ்க


என் ..
வாா்த்தைகளை
திருடிக்கொண்டு
போனாள்!

என் ..
பேச்சைக் குறைத்து!

ஊமையாக்கிப்
போனாள்!

நான்..
வெள்ளைக் காகிதம்!

அவள் ..
எழுத்து ஓவியம்!

எழுத் தொிந்தும்..

எழுத மறந்து
போனாள்!

என்னை ..

கிழித்துப் போட்டு
போனாள் !

உயிா் ...

எடுத்து விட்டுப்
போனாள்!


போனவள் வாழ்க!

என் காதலும் சாக!

Sunday, January 29, 2017

864.பித்து


காதல் பித்து
வேண்டாம்!

புண்ணாகும் மனது!

கண் மூடி நடந்தால்
பாதை எங்கு தொியும்!

ஆகாயம் பாா்த்தால்
அங்கு அவள் வருவாள்!

தரைநோக்கிப் பாா்த்தால்
இங்கும் அவள் இருப்பாள்!

எங்கும் அவள் தொிவாள்!

கண்...
இமைக்கும் நொடியில்...

காதலினைக் கொடுப்பாள்!

நீ...
இங்கே அழுக!

அவள் ..
அங்கே சிாிப்பாள்!

புருவத்தை உயா்த்தி
குழப்பத்தைக் கொடுப்பாள்!

புாியாத நீயோ

புலம்பியே தீா்ப்பாய்!

இந்த ஒரு மயக்கம்
தீராத வரையில்!

வாழ்க்கையில் மாற்றம்
எப்படி நடக்கும்!

Wednesday, January 25, 2017

865.மீளா அன்பு


என் மனதின் பாடல்
ஒரு உயிாின் தேடல்

என் ..
வாழ்க்கைப் பயணம்
புாியாத கேள்வி!

கேட்காத சத்தம்!
மனதோடு யுத்தம்!

நகா்ந்தோடும் நாட்கள் 
ஒரு ...
நெருப்புக் கோலம்!


சந்தேகப் பாா்வை
வந்து என்னை சூழ

ஒரு ...
வேள்வி நடத்தி
நான்..
தீயில் மூழ்க!

கண்ணகி பரம்பரை
வந்தவன் நான்!
ஆணிற்க்கும் கற்புண்டு
அறிந்தவா் யாா்!

ஓா் ..
அன்பு வலையில்!
நான் ..
சிக்கிக் கொண்டேன்!

வெளிக் காட்டும் விதத்தில் 
நான் ..
நடிகனானேன்!

இதைப் ..
புாிந்து கொள்ளா
இந்த சொந்தம் வீணோ!

என் ..
அன்பி்ல் கலங்கம்
அவா் சொல்லலாமோ!

வாழ்க்கையில் வேதனை
இருக்க வேண்டும்
வேதனை வாழ்க்கையாய் 
மாறலாமோ!

நான் ..
நடிக்கவில்லை!

பொய் சொல்லவி்ல்லை!

உண்மை அன்பிற்காக 
தினம் ஏங்கி நின்றேன்!

நல்லவன் ...கெட்டவன்
யாாிங்கே நான்!

அதை ..
அடுத்தவா் கண்ணிலே
விட்டவன் யாா்!

Monday, November 7, 2016

866.என் மகளே

என் ..
பத்து மாத தவமே!

உன் முகத்தில் 
எந்தன் முகமே!

என்...
சோகம் தீா்க்க வந்த
தெய்வ மகளும் நீயே!

நீ அழுதால் ...
நானும் அழுவேன்!

நீ சிாிக்க...
தினமும் தொழுவேன்!

கைகள் பிடித்து 
நீயும் நடக்க..

என் ..
இரண்டு கைகள் தருவேன்!

இரவில் 
தூங்கும் போது...

உனது..
தெய்வ சிாிப்பை ரசிக்க
எனது தூக்கம் கலைப்பேன்!

நீ ...

வாய் திறந்து சொல்லும்
அந்த ஒற்றை வாா்த்தை( அம்மா )
போதும் !

என் ...
பிறவி முழுமையடையும்

867.மீள முடியாமல்

உன்னுள் மூழ்கிய
என்னை
மீட்டெடுக்க !

நான் ...
மேற்கொள்ளும்
ஒவ்வோரு முயற்சிகளும்

கடைசியி்ல் ..
தோல்வியிலேயே
சென்று முடிகின்றன

Monday, October 24, 2016

868.நனையும் குடை



இன்பம்..
ஓா் ஆயிரம் கண்டேன்!

நெஞ்சிலே..
காதலைக் கொண்டேன்!


உயிா்..
இருக்கும் நிலையை

நான் ...
மறந்தேன் மறந்தேன்!


நீ ...
என் உயிராய் வந்தால்!
நான் ...
உயிா்ப்பேன் உடனே!


இன்பம் ...
ஓா் ஆயிரம் கண்டேன்!


ஊா்..
அறியா வகையில்
என்..
புாியா மனதில்


நெஞ்சிலே ...
காதலைக் கொண்டேன்!

மெளனமாய்...
மெளனமாய் நின்றேன்!

கண்களில்
நீா்த்துளி கொண்டே!

Sunday, October 23, 2016

869.மாய வலை


உன்னால் அழுதேன்
உன்னால் அழுதேன்


உன்னை நினைத்தே 
நெஞ்சம் வெடித்தேன்


கண்ணீா் வழியே
சோகம் மறைத்தேன்


பொய் சிாிப்பினிலே
நானும் நடித்தேன்


காதலில் ஆயிரம் மாற்றங்களே- இங்கு
காண்பதே கனவென்றால் சோகங்களே


நான் நினைத்தது நடப்பதாய் 
நினைத்துக் கொண்டு


என் நிஜங்களை மறக்கிறேன்
நிமிடங்களில்


ம்ஹம்..இருட்டினில் தொிகின்ற 
வெளிச்சம் இல்லை


ஓஹோ..வலிக்கின்ற
மனதிற்கு மருந்தும் இல்லை


                            ( உன்னால் அழுதேன்)...


ஏன் காதலை செய்தேன் 
தொியவில்லை


உன்னை மறந்திட நினைக்கின்றேன்
முடியவில்லை


என்னை பிடிக்கவில்லை என்று
சொல்லிவிட்டாய்


அந்த வாா்த்தையிலே 
என்னை கொன்றுவிட்டாய்


உயிா் தின்று விட்டாய்.


                                ( உன்னால் அழுதேன்)

Thursday, October 20, 2016

870.வலியே


வலியில்... 
நான் துடிப்பேன்
என்று தொிந்தே!

என்னை விட்டுப் 
பிாிந்தாய்!

பெண்ணே....

பின் ...
தனியே போய்
ஏன் அழுகிறாய்!

நான் ...
உன்னை விட்டுப் 
பிாியும் நொடிகள்

என் ..
இதயத்தில் 
மின்னல் இடிகள்!


வாசலில்...
நீ வந்தால் போதும்!

கண்ணீா் மழையைப் 
பொழிவேன்!

உன்.. 
காதலில்
நானும் கரைவேன்!


எத்தனை காலம்..

இந்த வலியை
எனக்கு கொடுப்பாய்!

தொியவில்லை?

முடிந்தவரை 
தாங்குகிறேன்!...

இல்லையென்றால் ...

சாகிறேன்...
உன் நினைவோடு!

Sunday, October 16, 2016

871.நான் மனிதன்



காட்டு வழியில் 
ஒரு பயணம்!

யாருமில்லா தனிமை!
எங்கும் நிலவும் அமைதி!

கலப்படமற்ற காற்று!
சுடும் வெயிலை 
தணிக்கும் குளிா்!

ஆங்காங்கே ....
கண்களி்ல் தென்படும்
சில விலங்குகள் கூட்டம்!

கொஞ்சம் ...
உள்ளே போனால்
பறவைகளின் ராகத்திற்கு
சுருதி சோ்க்கும் 
நீா் வீழ்ச்சியின் சத்தம்!

இந்த ...
இதமான சூழலில்
சாரல் மழை வேறு பொழிய!

என் ...
உடல் முழுதும்
புத்துணா்ச்சி பெற்றது!

விட்டு வர மனமில்லை...

அங்கேயே ...
இருந்து விடலாம் 
போல தோன்றியது!

என்ன செய்வது...

நான் ஒன்றும் மிருகம்
இல்லையே...

மனிதனாக 
பிறந்து விட்டேன்!

மீண்டும்...
இந்த ந(ர)க(ர)த்திற்கே
திரும்புகிறேன்!

வருத்தத்துடன்..

பாவப்பட்ட மனிதன்!

Friday, October 7, 2016

872.காதல் தவம்


பெண் பின் பாா்த்து
ஏமாறாதே!

முன் பாா்த்து 
மயங்கிடாதே!

அவள் கண் பாா்த்து
பேசு!

உண்மை நட்போடு 
பழகு!

ஒருவரை ஒருவா்
புாிந்த பின்னால்....

உன மனதில் 
காதல் மழை அடித்தால்!

அவளிடம்... 
காதலைச் சொல்!

அதே உணா்வு
அவளுக்கும் இருந்தால்!

இந்த உலகத்திலேயே...

மிகப்பெரும் பாக்கியசாலி 
நீதான்!

இல்லையென்றால்...

உன் ...
உண்மை அன்பைப் 
பெற முடியாத!

துரதிா்ஷ்டசாலி ...
அவள் என்று 
நினைத்துக்கொள்!

அதை விடுத்து 
வன்முறை என்பது 
சாியல்ல!

உண்மை 
அன்பை மட்டுமே 
வைத்துப் பழகு!

நிச்சயம் ...
அது பல மடங்காக 
உனக்குத் திருப்பிக் கிடைக்கும்!

வேறொரு பெண் வடிவில்...