Friday, December 26, 2014

888.வாடினேன்









பாலில் விஷம் போட்டு - அதை  
பருக எனக்குக் கொடுத்தவளே 

ஆளில்லாத காட்டுக்குள்ளே -தனியாக 
என்னை அனுப்பியவளே 

எரியும் நெருப்பில் - சிரித்துக்கொண்டே 
என்னை தள்ளியவளே !

காதலிக்க வைத்து விட்டு - கண்ணீரை 
எனக்குத் தந்தவளே !

உன்னால் ...
நான் மட்டுமல்ல 

என்னோடு சேர்ந்து 
உனக்காக 

இன்று..... 

இந்த பூவும் வாடுகின்றது !......


Friday, November 14, 2014

889.நான்...நானேதான்


















காதலிப்பதும் 
காதலை....
ஏற்க மறுப்பதும் 
அவரவர் உரிமை!

காதலிப்பது... 
என் உரிமை
அதை...
ஏற்க மறுப்பது 
அவள் உரிமை! 

யாருக்காகவும் 
என் உரிமையை 
விட்டுத்தர இயலாது!....

ஏன்.... 
அவளே சொன்னால் கூட!..... 

Wednesday, November 12, 2014

890.மாறாதவன்


















நான்... 
எதைச் சொன்னாலும் 
அதை... 
உண்மை என்றே நம்புகின்றாய் !

மறந்தும் கூட 
என்னால்...
உன்னிடம் பொய் சொல்ல இயலவில்லை! ...

உன்.. 
உண்மையான 
அன்பிற்கு முன்னால்!...

Tuesday, November 11, 2014

891.தெளிவு அற்று
















ஒவ்வொரு முறையும்
ஆயிரம் கேள்விகளுடன்....

நான்..
உன்னைப்  பார்க்க
வரும்போதெல்லாம்....

மௌனம்..
ஒன்றை மட்டுமே
 எனக்கு  பதிலாகத் தருகிறாய் ! ....

" கடவுள் சன்னதி "......

Friday, November 7, 2014

892.ஒரே குட்டையில் ஊறிய மட்டை



















சில சமயங்களில்..

மிகச்சிறந்த அறிவாளியாக  
நான் செயல்படுகிறேன்! 

சில சமயங்களில்..

அடி முட்டாளாக 
நடந்துகொள்கிறேன்! 

சில சமயங்களில்..

கருணையின் வடிவமாக 
இருக்கின்றேன்! 

சில சமயங்களில்...

கோபத்தின் உச்சத்தில் 
ஊரிப்போகின்றேன்!  

சில சமயங்களில்..!

வாரி வழங்குவதில் 
வள்ளலாக திகழ்கின்றேன் !

சில சமயங்களில்...

கஞ்சம் செய்வதில் 
மன்னனாகவும் ஆகின்றேன் 
.
.
.
.
என்ன செய்வது .....

இந்தக் காட்டு மிராண்டி கூட்டத்தில் 
நானும் ஒருவன்தானே ! ........

Monday, November 3, 2014

893.தேடல்















ஆளை விட்டுத் தேடிப் பார்த்தேன் !
அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்தேன் !
மலைமேல் ஏறி குதித்துப் பார்த்தேன் !
மௌனமாய் சற்றே பேசிப் பார்த்தேன் !
நிற்காமல் ஓடிப் பார்த்தேன் !
தலைகீழாகவும் நின்று பார்த்தேன் !
பணத்தை கொஞ்சம் சேர்த்துப் பார்த்தேன் !
பசியால் கொஞ்சம் வாடியும் பார்த்தேன் !
அங்கும் இல்லை நிம்மதி !
இங்கும் இல்லை நிம்மதி !
எங்கும் இல்லை நிம்மதி !
அட...
எதிலும் இல்லை நிம்மதி !
பிறகு .....
கண்ணை கொஞ்சம் மூடிப் பார்த்தேன் !
உள்ளே கொஞ்சம் உற்றுப் பார்த்தேன் !
என்னுள் இருக்குது நிம்மதி !
அதை..
வெளியே தேடுது என் மதி !

Monday, September 8, 2014

894.பார்வை




















நிலவும் கூட
கலங்கமாகத்தான் தெரிகின்றது !


நாம் ...


பார்வைக் கோளாறுடன்
பார்க்கும் போது  !

Friday, July 11, 2014

895.எதிர்பார்ப்பு




நான்..

நினைத்த மாதிரியெல்லாம் 
"நீ" இருக்க வேண்டும்  - என்று 
ஆசைப்படுகிறேன் !........

நீயும்...
என்னைப்போலவே  நினைப்பாய் !
என்பதை மறந்து விட்டு ...

Thursday, June 5, 2014

896.அறியாத கண்கள்





என்னுள் மறைந்திருக்கும்
சோகத்தை.....
அறியாத பலர் 

என்னப் பார்த்து
சொல்கின்றனர் !.....

"இவன் எதையும் தாங்கும் இதயம் "

Sunday, May 4, 2014

897.என் தகுதி


அவள்
என்னைக் காதலிப்பதற்கு

"நான் தகுதியானவனா"......
 என்பது....
எனக்கு தெரியவில்லை !

ஆனால்.... 

அவள் 
என்னை காதலிப்பதே
எனக்கு ஒரு தகுதிதான் !

Sunday, April 20, 2014

898.ஆறுதல்





நீ... 

விட்டுச்சென்ற தலையணை 
விவரம் தெரியாமல் 
"நீ எங்கே" என்று கேட்கிறது !

அதற்கு....

 என் 
கண்ணீர்த்துளிகளால்.. 
ஆறுதல் சொல்கிறேன் !
விவரம் தெரியாதவனாய்....  

899.கவிதையாய்

நான்...
உன்னைப்பற்றி
எழுத நினைத்த
வார்த்தைகளெல்லாம்

உன்..
கண்களை பார்த்தும்
கவிதைகளாய்
உன் காலடியில் !

Thursday, January 9, 2014

900.ஏன் மறந்தாய்





என் கைகளில்...
நீ..
செய்து கொடுத்த சத்யம் !

ஒட்டிக்கொண்டு
உன்னை கேட்கிறது !

"ஏன் இவனை மறந்தாய்"


Tuesday, January 7, 2014

901.முதல் காதல்





தலை முடி முழுவதும் 

நரைத்து விட்டது !

பேரன் பேத்தி 
எடுத்தாகி விட்டது  !

நடையும் 
தளர்ந்து விட்டது  !

ஞாபக மறதியும் 
வந்து விட்டது  !

ஆனால்.....

மாறாத பசுமையாய் 

மனதில் இன்றும் ....

"முதல் காதல் "

902.புரிதல்




நான்..

உன் மீது வைத்திருக்கும் ...

அன்பின் அளவை
அறிந்து  கொண்டேன் !

உன்னைப் பிரிந்து ....

வெகு தூரம்
சென்ற போது !