Sunday, October 16, 2016

871.நான் மனிதன்



காட்டு வழியில் 
ஒரு பயணம்!

யாருமில்லா தனிமை!
எங்கும் நிலவும் அமைதி!

கலப்படமற்ற காற்று!
சுடும் வெயிலை 
தணிக்கும் குளிா்!

ஆங்காங்கே ....
கண்களி்ல் தென்படும்
சில விலங்குகள் கூட்டம்!

கொஞ்சம் ...
உள்ளே போனால்
பறவைகளின் ராகத்திற்கு
சுருதி சோ்க்கும் 
நீா் வீழ்ச்சியின் சத்தம்!

இந்த ...
இதமான சூழலில்
சாரல் மழை வேறு பொழிய!

என் ...
உடல் முழுதும்
புத்துணா்ச்சி பெற்றது!

விட்டு வர மனமில்லை...

அங்கேயே ...
இருந்து விடலாம் 
போல தோன்றியது!

என்ன செய்வது...

நான் ஒன்றும் மிருகம்
இல்லையே...

மனிதனாக 
பிறந்து விட்டேன்!

மீண்டும்...
இந்த ந(ர)க(ர)த்திற்கே
திரும்புகிறேன்!

வருத்தத்துடன்..

பாவப்பட்ட மனிதன்!

No comments:

Post a Comment