Wednesday, November 28, 2012

938.அழியாத காதல்

கடல் அலை நீரைப் போல
அவள் கரை தேடி வந்தேன் !
கரை தொடும் நேரம் பார்த்து
அவள் கரை மாற்றிக் கொண்டால் !

இவன் அழியாத காதல்
அவள் மனதோடு போகும் !
அதை கொடுக்காமல் போவாள்
இவன் மனமெங்கும் காயம் !

Thursday, November 22, 2012

939.காதல் கனவு

கற்பனை செய்யும் 
என்.... 
மனதிற்கு தெரியவில்லை ! 

காதல்.... 
ஒரு கனவு என்று !

Sunday, November 18, 2012

940.சிரித்த முகம்

துன்பம் வரும்போது
உன்னை நான் திட்டுவேன்
இன்பம் வரும்போ
தோ
மலர் கொண்டு துவுவேன்
எப்போதும் நீ அப்படியே
மாறுவது நான் மட்டும்தான்
அதனால்தான்.......

 நீ "கடவுள்"
நான் "மனிதன்"

Thursday, November 1, 2012

941.காதல் கொள்வேன்

போகும் உன்னை
காணும் கண்கள்
கண்ணில் இல்லை
என் கண்ணில் இல்லை

சிலை போல நின்றேன்  !
மீண்டும் உன்னை
காண எண்ணி

இதை....
மீண்டும் மீண்டும்
செய்யும் உன்னை
என்ன செய்ய !

பழி வாங்கும் எண்ணம்
கொஞ்சம் கூட
என் நெஞ்சில் இல்லை

நீ........
வேண்டும் வேண்டும் 

வேண்டும் என்றே 
 உன்மேல் காதல் கொள்வேன் !
உன்மேல் காதல் கொள்வேன் !

942.அவள் அழகிதான்

அவளை......
 ஏன் எனக்கு பிடித்தது ?
தெரியவில்லை  !

அவள் நிறமோ
மாநிறம்தான் !
குரல் வளமோ
ஓரளவுதான் !
நடையும்
சுமார்தான் !
கூந்தலும்
சொல்லும் அளவு இல்லை !
இருந்தும்.....

 ஏன் பிடித்தது ?
என்ற கேள்வி மனதிற்குள் !

பின்புதான் புரிந்தது....
இந்த உலகிலுள்ள
எல்லாப் பெண்களும்
அழகான பெண்கள்தான்
அவரவர் "காதலர்களுக்கு"