Friday, January 25, 2013

926.முடியாமல்

நீ...
என்னைப்  ....
புரிந்து கொள்ளவில்லை
என்றாலும் !
 

உன்னைப்...
பிரிந்து செல்ல
என்னால்....
முடியவில்லை !
 

என்னைப்....
பிரிந்தால்தான் !
உனக்குப்...
புரியும் என்றால் !
 

உன்னைப்....
பிரிந்து செல்கிறேன்  !
 

பிரிய....
முடியாமலேயே !

927.காதல் நோய்

படிச்சா போதுமா  !
பைத்தியம்....
புடிச்சா தீருமா !

சிரிச்சும் பார்த்துட்டேன் !
இரவுல ...

அழுதும் பார்த்துட்டேன் !
 

கண்முழி பிதுங்குது !
தலையுல .....
நரைமுடி தொடங்குது !
 

சிரிக்கிற ஏனடி !
உன்னை ....
நினைக்கிறேன்  நானடி !
 

அலட்டுற ஏனடி !
மச்சான் .....
மனசுல நீயடி !
 

இரவுல படுக்குறேன்
தூக்கம் ....

வருவது இல்லையே !

விடுகதை போலவே 
குழப்பம் ....
தலையை சுத்துதே !

விபத்துகள் இருந்தும் 
மனம் ....
உன்னையே விரும்புதே !

விலகிய நாளிலும் 
மனதில் ....
உன்னையே விதைக்கிறேன் !

அறுவடை செய்திடு !
இல்லை ....
ஆளையே.....
கொன்று விடு !

928.உனக்காக

நீ .....
என்னைக் கொன்றாலும் !
உன்மேல் ....
நான் ....
கோபப்படமாட்டேன் !

உனக்காக ....
நான் ... 
கொடுத்த  உயிர் 
உனக்கே சொந்தம் !

நான்...
இறந்தாலும் 
உயிர்த்தெழுவேன்  !

மீண்டும் .....
நீ என்னைக்......
கொள்ள !

Wednesday, January 23, 2013

929.கண்ணில்

"என் கண்கள்
 அடிக்கடி நனைகிறது !

உன்... 
ஞாபகத்  துளிகளால் "

Sunday, January 20, 2013

930.அழகே
















புதிதாகச் சொல்ல 

நான் ....
புரட்சிக் கவிஞன் இல்லை  !

மனதில் பட்டதை 
மறைக்காமல் சொல்கிறேன் 

"நீ ரொம்ப அழகா இருக்"

931.மறக்கவில்லை

நான் ......
உன்னை மறந்து விட்டதாக 
நினைத்துக்கொண்டிருக்கின்றேன் ! -அனால் 
என் மனதில் !
நீ இருப்பதை -அடிக்கடி
எனக்கு...
நியாபகப்படுதிக் கொண்டிருக்கிறது !
தவறுதலாய்.....
என் வாய் மெல்லும் 
உன் பெயரால் !       

Tuesday, January 8, 2013

932.இருண்ட உலகம்

"மறந்து மறந்து போகும் நினைவு 
திரும்பத் திரும்ப வரும் என கனவு !

அழிந்து போகும் உடலின் உள்ளே 
அழிய மறுக்கும் உருவம் உனது !

ஓசை இல்ல பாடல் எனது 
ஓசை மட்டும் உயிரே உனது !

ஆசை கொண்ட நெஞ்சம் எனது 
ஆயில் கெடுக்கும் நேசம் உனது !

ஐயம் கொண்டே காதலைச்  சொன்னேன்
ஐந்து நிமிட மௌனம் உனது !

"இல்லை" என்று நீயும் சொன்னால் 
இருண்டு போகும் எந்தன் உலகு !"  

933. மறு ஜென்மம்

"எத்தனை முறை 
இறந்தாலும் !
பிழைத்துக் கொள்கிறேன் 
என்னுள் இருக்கும்........
உன்னால் ! " 

Tuesday, January 1, 2013

934.அரை மனதுப் பெண்ணே

அரை மனதுப்
பெண்ணே ...
மௌனமாய் இருப்பதையே !
நீ.....
வழக்கமாய் கொண்டிருந்தாலும் !
என்  காதலை
சொல்லிக்கொண்டேதான் இருப்பேன் !
 உன் காதுகள்
செவிடாகும் வரை !

935.நேரம் தாழ்த்தி

அன்பே .....
நேரம் தாழ்த்தி வந்துவிட்டேன்
மன்னித்துவிடு !
சீக்கிரம் வந்திருந்தால்
சிதைந்தே போயிருப்பேன் !
உன்.....
சமயலை சாப்பிட்டு ...:)

936.உன்னால்
















"மழைத் துளிகளுக்கெல்லாம்

உன்னால்....
காதல் தோல்வி !

உன்னைத் தொட்டுப்
போன பிறகு"