Saturday, December 19, 2015

883.சொல்லாத சொல்

















நான்...
உன்னிடம் 
சொல்ல நினைத்த 
வார்த்தைகளெல்லாம் !..

மௌனங்களாகவே....
மொழி பெயர்க்கின்றேன் !

என் மௌனங்களை 

நீ ...

புரிந்து கொள்வாய் 
என்ற நம்பிக்கையில் ! 

884. பிரிவு














ரோஜா மலரே .....
நீயும் நானும் 
ஒன்றுதான் ! ....
அவளை விட்டுப்
பிரிந்தஉடனேயே !...
வாடி விடுகின்றோம் ! ...

885.என்றும் உனக்காக ....









மறக்காதே பெண்ணே !...
உனக்காக...
உயிர் கொடுக்கும்
சொந்தங்கள் பல இருந்தாலும்!

நீ உயிர் விட்ட பின்னாலே
உன்னை..
சில நாட்களிலே மறந்திடுவார் !...
மறக்காதே பெண்ணே !...
நான் மட்டும்...
மரணத்தின் இறுதி வரை
உன்...
ஞாபகத்துளிகளோடு வாழ்ந்திடுவேன் !....
மறக்காதே பெண்ணே !....
மரணத்தின் இறுதியில்
உன்....
ஞாபகங்களை எடுத்துக்கொண்டு
உன்னை வந்து சேர்ந்திடுவேன்
உயிரோடு உயிராக !....
( மறக்காதே பெண்ணே !.....)