Monday, October 24, 2016

868.நனையும் குடை



இன்பம்..
ஓா் ஆயிரம் கண்டேன்!

நெஞ்சிலே..
காதலைக் கொண்டேன்!


உயிா்..
இருக்கும் நிலையை

நான் ...
மறந்தேன் மறந்தேன்!


நீ ...
என் உயிராய் வந்தால்!
நான் ...
உயிா்ப்பேன் உடனே!


இன்பம் ...
ஓா் ஆயிரம் கண்டேன்!


ஊா்..
அறியா வகையில்
என்..
புாியா மனதில்


நெஞ்சிலே ...
காதலைக் கொண்டேன்!

மெளனமாய்...
மெளனமாய் நின்றேன்!

கண்களில்
நீா்த்துளி கொண்டே!

Sunday, October 23, 2016

869.மாய வலை


உன்னால் அழுதேன்
உன்னால் அழுதேன்


உன்னை நினைத்தே 
நெஞ்சம் வெடித்தேன்


கண்ணீா் வழியே
சோகம் மறைத்தேன்


பொய் சிாிப்பினிலே
நானும் நடித்தேன்


காதலில் ஆயிரம் மாற்றங்களே- இங்கு
காண்பதே கனவென்றால் சோகங்களே


நான் நினைத்தது நடப்பதாய் 
நினைத்துக் கொண்டு


என் நிஜங்களை மறக்கிறேன்
நிமிடங்களில்


ம்ஹம்..இருட்டினில் தொிகின்ற 
வெளிச்சம் இல்லை


ஓஹோ..வலிக்கின்ற
மனதிற்கு மருந்தும் இல்லை


                            ( உன்னால் அழுதேன்)...


ஏன் காதலை செய்தேன் 
தொியவில்லை


உன்னை மறந்திட நினைக்கின்றேன்
முடியவில்லை


என்னை பிடிக்கவில்லை என்று
சொல்லிவிட்டாய்


அந்த வாா்த்தையிலே 
என்னை கொன்றுவிட்டாய்


உயிா் தின்று விட்டாய்.


                                ( உன்னால் அழுதேன்)

Thursday, October 20, 2016

870.வலியே


வலியில்... 
நான் துடிப்பேன்
என்று தொிந்தே!

என்னை விட்டுப் 
பிாிந்தாய்!

பெண்ணே....

பின் ...
தனியே போய்
ஏன் அழுகிறாய்!

நான் ...
உன்னை விட்டுப் 
பிாியும் நொடிகள்

என் ..
இதயத்தில் 
மின்னல் இடிகள்!


வாசலில்...
நீ வந்தால் போதும்!

கண்ணீா் மழையைப் 
பொழிவேன்!

உன்.. 
காதலில்
நானும் கரைவேன்!


எத்தனை காலம்..

இந்த வலியை
எனக்கு கொடுப்பாய்!

தொியவில்லை?

முடிந்தவரை 
தாங்குகிறேன்!...

இல்லையென்றால் ...

சாகிறேன்...
உன் நினைவோடு!

Sunday, October 16, 2016

871.நான் மனிதன்



காட்டு வழியில் 
ஒரு பயணம்!

யாருமில்லா தனிமை!
எங்கும் நிலவும் அமைதி!

கலப்படமற்ற காற்று!
சுடும் வெயிலை 
தணிக்கும் குளிா்!

ஆங்காங்கே ....
கண்களி்ல் தென்படும்
சில விலங்குகள் கூட்டம்!

கொஞ்சம் ...
உள்ளே போனால்
பறவைகளின் ராகத்திற்கு
சுருதி சோ்க்கும் 
நீா் வீழ்ச்சியின் சத்தம்!

இந்த ...
இதமான சூழலில்
சாரல் மழை வேறு பொழிய!

என் ...
உடல் முழுதும்
புத்துணா்ச்சி பெற்றது!

விட்டு வர மனமில்லை...

அங்கேயே ...
இருந்து விடலாம் 
போல தோன்றியது!

என்ன செய்வது...

நான் ஒன்றும் மிருகம்
இல்லையே...

மனிதனாக 
பிறந்து விட்டேன்!

மீண்டும்...
இந்த ந(ர)க(ர)த்திற்கே
திரும்புகிறேன்!

வருத்தத்துடன்..

பாவப்பட்ட மனிதன்!

Friday, October 7, 2016

872.காதல் தவம்


பெண் பின் பாா்த்து
ஏமாறாதே!

முன் பாா்த்து 
மயங்கிடாதே!

அவள் கண் பாா்த்து
பேசு!

உண்மை நட்போடு 
பழகு!

ஒருவரை ஒருவா்
புாிந்த பின்னால்....

உன மனதில் 
காதல் மழை அடித்தால்!

அவளிடம்... 
காதலைச் சொல்!

அதே உணா்வு
அவளுக்கும் இருந்தால்!

இந்த உலகத்திலேயே...

மிகப்பெரும் பாக்கியசாலி 
நீதான்!

இல்லையென்றால்...

உன் ...
உண்மை அன்பைப் 
பெற முடியாத!

துரதிா்ஷ்டசாலி ...
அவள் என்று 
நினைத்துக்கொள்!

அதை விடுத்து 
வன்முறை என்பது 
சாியல்ல!

உண்மை 
அன்பை மட்டுமே 
வைத்துப் பழகு!

நிச்சயம் ...
அது பல மடங்காக 
உனக்குத் திருப்பிக் கிடைக்கும்!

வேறொரு பெண் வடிவில்...

Thursday, October 6, 2016

873.தங்கை மகளுக்காக


பத்து மாசம் 
பொறுத்திரு மருமகளே!

பொன்னான உலகம் 
உனக்காக காத்திருக்கு!

நீ ...
வந்து சேரப்போற இடம்
சொா்க்கத்தோட மறு இடம்!

உன்ன ...
பொறுப்பா பாத்துக்க
தங்கம் போல 
அம்மா இருக்கா!

ஓடி விளையாடி
உலகத்த தொிஞ்சுக்க
மொத்த சொந்தமும்
இருக்கு!

இன்பம் மட்டுமே
உனக்கு சொந்தமா
இருக்கும்!

துன்பம் வந்தா
அத தாங்கிக்க

மாமன்...
நான் இருக்கேன்...

மருமகளே...

பயப்படாதே...

மொத்த சொந்தமும்
உனக்காக காத்திருக்கு
தோழ் கொடுக்க

மாமன் ..
நான் இருக்கேன்
உயிரையும் கொடுக்க...