Tuesday, December 18, 2012

937.அறியாமல்
















உன் கண்களால் ......

என்னை ....
உன்னுள் கடத்துகிறாய் !

உன்னை அறியாமலே.....

Wednesday, November 28, 2012

938.அழியாத காதல்

கடல் அலை நீரைப் போல
அவள் கரை தேடி வந்தேன் !
கரை தொடும் நேரம் பார்த்து
அவள் கரை மாற்றிக் கொண்டால் !

இவன் அழியாத காதல்
அவள் மனதோடு போகும் !
அதை கொடுக்காமல் போவாள்
இவன் மனமெங்கும் காயம் !

Thursday, November 22, 2012

939.காதல் கனவு

கற்பனை செய்யும் 
என்.... 
மனதிற்கு தெரியவில்லை ! 

காதல்.... 
ஒரு கனவு என்று !

Sunday, November 18, 2012

940.சிரித்த முகம்

துன்பம் வரும்போது
உன்னை நான் திட்டுவேன்
இன்பம் வரும்போ
தோ
மலர் கொண்டு துவுவேன்
எப்போதும் நீ அப்படியே
மாறுவது நான் மட்டும்தான்
அதனால்தான்.......

 நீ "கடவுள்"
நான் "மனிதன்"

Thursday, November 1, 2012

941.காதல் கொள்வேன்

போகும் உன்னை
காணும் கண்கள்
கண்ணில் இல்லை
என் கண்ணில் இல்லை

சிலை போல நின்றேன்  !
மீண்டும் உன்னை
காண எண்ணி

இதை....
மீண்டும் மீண்டும்
செய்யும் உன்னை
என்ன செய்ய !

பழி வாங்கும் எண்ணம்
கொஞ்சம் கூட
என் நெஞ்சில் இல்லை

நீ........
வேண்டும் வேண்டும் 

வேண்டும் என்றே 
 உன்மேல் காதல் கொள்வேன் !
உன்மேல் காதல் கொள்வேன் !

942.அவள் அழகிதான்

அவளை......
 ஏன் எனக்கு பிடித்தது ?
தெரியவில்லை  !

அவள் நிறமோ
மாநிறம்தான் !
குரல் வளமோ
ஓரளவுதான் !
நடையும்
சுமார்தான் !
கூந்தலும்
சொல்லும் அளவு இல்லை !
இருந்தும்.....

 ஏன் பிடித்தது ?
என்ற கேள்வி மனதிற்குள் !

பின்புதான் புரிந்தது....
இந்த உலகிலுள்ள
எல்லாப் பெண்களும்
அழகான பெண்கள்தான்
அவரவர் "காதலர்களுக்கு"

Thursday, October 25, 2012

943.மழை

வானின் காதலை
பூமிக்குச் சொல்ல
கடவுள் அனுப்பிய
காதல் தூதுவன்
     "மழை"

Friday, October 12, 2012

944.காதலின் தூய்மை

முறுக்கிய மீசை வைத்து !
நேர்த்தியாக தலை சீவி !
பகல் தொடங்கும் நேரத்தில்
கடற்கரை மணலில்
அவளுக்க காத்திருந்தேன்  !


மாலை தொடங்கும் நேரத்தில்
அவள் ! மழையுடன் வந்தால் 

மிகுந்த  கோபம்
அவள் மேல் எனக்கு
மெல்லியதாய்  சிரித்து
என்னை குளிர வைத்தாள்


பிறகு என்ன !


சாரல் மழையில் நனைந்தபடி-கடலிலே
எங்கள் காதலை கலந்தோம் -இப்போது
 கடல் நீரும் ! குடிநீராக மாறியது
எங்கள் காதலின்  தூய்மையால் !

945.நீ இல்லாமல்


"வெறுமையாக  உள்ளது ! மனது
முழுவதும்   என்னை விட்டு
நீ போன பிறகு
"

Monday, October 8, 2012

946.மூடிய கண்ணில்

மூடிய கண்களுக்குள்
முகம் நிறைய 

புன்னகையுடன் ஒரு பெண் !
தேடிய பெண் - இவளென்று
கண் திறந்தேன் !
தெரிந்தது அது கனவென்று ! -பின்
தெரிந்தே தூங்கினேன் !
அவள் புன்னகையைப் பார்க்க.

Friday, October 5, 2012

947.மின்னல் சிரிப்பு

"இருண்ட இரவில்
மிகுந்த வெளிச்சம்
மின்னல்  போல
வள் சிரிக்கும்
அந்த ஒரு நொடியில் "

Friday, August 3, 2012

948.விளையாட்டாய்

விடுமுறை எடுத்து
விடை தேடியும்
விடை கிடைக்கவில்லை
விளையாட்டாய் !
"குழந்தை கேட்ட கேள்விக்கு"

Thursday, July 26, 2012

949.கோழையாகிறேன்

கொஞ்சம் கொஞ்சமாக
நான் கோழையாகிறேன் !
அவள் கால்கள்
மெல்ல மெல்ல
என்னை நோக்கி
நடந்து வருகையில் !

Wednesday, July 25, 2012

950. இன்று மட்டும்

நாட்கள் !
ஒவ்வொரு நாளும்
பிறந்து கொண்டேதான் இருக்கின்றன ! -அனால்
இன்று மட்டும் சிறப்பானது
நீ "பிறந்த நாள்" என்பதால்!

Tuesday, July 17, 2012

951.உயிரே நீ

உயிரே நீ !  உயிரே நீ !
உயிருக்குள் உயிரே நீ !
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
உள்ளுக்குள் ஒரு வேள்வி  !

பெண்ணானாய் அது பாவம் !
ஆண் நெஞ்சில் ஒரு சாபம்  !
"நீ வேண்டாம்" என்று சொன்னால்
என் நெஞ்சம் என்னவாகும் !

நானாக விழவில்லை
நீயேதான் விழவைத்தாய் !
பிழையெல்லாம் உனதாக
என் காதல் அரும்பாகும் !

உன் நெஞ்சில் கை வைத்து
நீ சொல்லு ! சரிதானா
ஆண் நெஞ்சை பாழாக்கி
பல் காட்டி சிரிக்காதே !

பாவத்தை செய்திடவே
இந்தப் பிறவி எடுத்தாயோ !
பரிதாபம் என் மீதே
சிறிதளவும் கிடையாதோ  !

பொய்யாக நடிக்காதே !
உண்மை சொல் ! வலிக்காதே
பறிபோன மனதிற்கு
பதில் சொல்லு ! என் உயிரே

Monday, July 16, 2012

952.கண்ணாடியைப் பார்த்து

"காதலைச் சொல்வது
மிகவும் எளிது !
அவள் இல்லாத போது
கண்ணாடியைப்  பார்த்து
சொல்லும் போது மட்டும் !"

Sunday, July 15, 2012

953.வந்துவிடு

"நேரம் தவறாமல்
உன்னை நினைதுக்கொண்டிருகின்றேன்  !
நேரமாய் வந்துவிடு 
நின்று விடும் என் இதயத்துடிப்பை
இயங்க வைக்க !  "

Tuesday, July 10, 2012

954.ஒரு தலை காதல்

பெண்ணே !
நீ செய்த தவறுக்கு
எனக்கு தண்டனை !
" முகத்தில் தாடி "

Tuesday, April 10, 2012

955.அம்மாவிடம்

நடிப்பில் பயிற்சி இருந்தும்
எனக்கு பாதி மதிப்பெண்தான்
"அம்மாவிடம்" .................
பொய் சொல்லும் போது !

Wednesday, April 4, 2012

956.முன்ஜாமீன்

"ஆண்கள் அனைவரும்
வைத்திருக்க வேண்டும் -முன்ஜாமீன் !
பெண்களின் சிரிப்பில்
சிறையாவதை தடுக்க !"

Thursday, March 29, 2012

957.இப்படிக்கு ...............

எங்கே இருக்குறீர்கள் ?
உங்களின் கவனக்குறைவால்
இப்போது நான் வேறொருவன் கையில் !
உங்களைப் போல அல்ல -அவன்
ஒரு நல்ல விலைக்கு
என்னை நாடு கடத்தி விட்டான் !
நாடு விட்டு  நாடு சென்றாலும்  
அதுவரையில் ......
என்னை பத்திரமாக பார்த்துக்கொண்ட
உங்களை நான் மறக்க மாட்டேன் !

இப்படிக்கு
" Nokia C3"

Monday, February 13, 2012

958.காதல் செய்

காதல்...............
இந்த மூன்றெழுத்து பூவின் வாசம்
உலகெங்கும் பரவிக் கிடக்கிறது !
இன்று மட்டுமல்ல !
வருடம் முழுதும்
இந்த வாசத்திலேயே 
மயங்கிக் கிடப்போம் .    

-அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்

Thursday, January 5, 2012

959.முன் ஜென்மம்

"முடியும் என்றே 
முயன்று கொண்டிருக்கின்றான்
அவள் மனதில் இடம் பிடிக்க 
முன் ஜென்மத்திலிருந்தே "