Tuesday, November 22, 2011

963.கடவுளுக்கே வெளிச்சம்

ஒன்றும் கேட்காத கடவுளுக்கு
கோடியில் அர்ச்சனை !
பிச்சை கேட்கும் மனிதருக்கோ 
சில்லரை தட்சணை  !      

Wednesday, November 16, 2011

964.மௌனமாய்

"ஆண்மை" என்று நினைத்துக்கொண்டு 
அவளை அடித்து விட்டேன்!
அவள்  அழவில்லை !
திருப்பி அடிக்கவும் இல்லை!
மௌனமாய் இருந்து
என்னை கொன்று விட்டாள் .

Wednesday, November 2, 2011

965.மை

பேனாவில் மை இல்லை- ஆனால் 
கவிதை எழுதுகிறேன் 
"காதல் மயக்கத்தில்"

966.கிறுக்கள்

எத்தனை முறை படித்தாலும் 
எதுவும் புரியவில்லை
இருந்தும் ரசிக்கிறேன்
"குழந்தையின் கிறுக்கள்"