நீ...
விட்டுச்சென்ற தலையணை
விவரம் தெரியாமல்
"நீ எங்கே" என்று கேட்கிறது !
அதற்கு....
என்
கண்ணீர்த்துளிகளால்..
ஆறுதல் சொல்கிறேன் !
விவரம் தெரியாதவனாய்....
நான்...
உன்னைப்பற்றி
எழுத நினைத்த
வார்த்தைகளெல்லாம்
உன்..
கண்களை பார்த்தும்
கவிதைகளாய்
உன் காலடியில் !