Friday, November 14, 2014
Wednesday, November 12, 2014
Tuesday, November 11, 2014
Friday, November 7, 2014
892.ஒரே குட்டையில் ஊறிய மட்டை
சில சமயங்களில்..
மிகச்சிறந்த அறிவாளியாக
நான் செயல்படுகிறேன்!
சில சமயங்களில்..
அடி முட்டாளாக
நடந்துகொள்கிறேன்!
சில சமயங்களில்..
கருணையின் வடிவமாக
இருக்கின்றேன்!
சில சமயங்களில்...
கோபத்தின் உச்சத்தில்
ஊரிப்போகின்றேன்!
சில சமயங்களில்..!
வாரி வழங்குவதில்
வள்ளலாக திகழ்கின்றேன் !
சில சமயங்களில்...
கஞ்சம் செய்வதில்
மன்னனாகவும் ஆகின்றேன் !
.
.
.
.
என்ன செய்வது .....
இந்தக் காட்டு மிராண்டி கூட்டத்தில்
நானும் ஒருவன்தானே ! ........
Monday, November 3, 2014
893.தேடல்
ஆளை விட்டுத் தேடிப் பார்த்தேன் !
அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்தேன் !
அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்தேன் !
மலைமேல் ஏறி குதித்துப் பார்த்தேன் !
மௌனமாய் சற்றே பேசிப் பார்த்தேன் !
மௌனமாய் சற்றே பேசிப் பார்த்தேன் !
நிற்காமல் ஓடிப் பார்த்தேன் !
தலைகீழாகவும் நின்று பார்த்தேன் !
தலைகீழாகவும் நின்று பார்த்தேன் !
பணத்தை கொஞ்சம் சேர்த்துப் பார்த்தேன் !
பசியால் கொஞ்சம் வாடியும் பார்த்தேன் !
பசியால் கொஞ்சம் வாடியும் பார்த்தேன் !
அங்கும் இல்லை நிம்மதி !
இங்கும் இல்லை நிம்மதி !
இங்கும் இல்லை நிம்மதி !
எங்கும் இல்லை நிம்மதி !
அட...
எதிலும் இல்லை நிம்மதி !
அட...
எதிலும் இல்லை நிம்மதி !
பிறகு .....
கண்ணை கொஞ்சம் மூடிப் பார்த்தேன் !
உள்ளே கொஞ்சம் உற்றுப் பார்த்தேன் !
உள்ளே கொஞ்சம் உற்றுப் பார்த்தேன் !
என்னுள் இருக்குது நிம்மதி !
அதை..
வெளியே தேடுது என் மதி !
அதை..
வெளியே தேடுது என் மதி !
Subscribe to:
Posts (Atom)