என் கைகளில்...
நீ..
செய்து கொடுத்த சத்யம் !
ஒட்டிக்கொண்டு
உன்னை கேட்கிறது !
"ஏன் இவனை மறந்தாய்"
தலை முடி முழுவதும்
நரைத்து விட்டது !
பேரன் பேத்தி
எடுத்தாகி விட்டது !
நடையும்
தளர்ந்து விட்டது !
ஞாபக மறதியும்
வந்து விட்டது !
ஆனால்.....
மாறாத பசுமையாய்
மனதில் இன்றும் ....
"முதல் காதல் "
நான்..
உன் மீது வைத்திருக்கும் ...
அன்பின் அளவை
அறிந்து கொண்டேன் !
உன்னைப் பிரிந்து ....
வெகு தூரம்
சென்ற போது !