உன்னை நினைத்துக்
காதல் கடிதம் ஒன்றை
எழுதிவிட்டேன் !.....
அதை...
உன்னிடம் ...
என் உதடுகள் வலிக்கப் .
படித்துக் காட்டியும் விட்டேன் !
நீயோ !....
என்னைப் ...
பிடிக்காதவள் போல்
நன்றாக நடித்துக் காட்டுகிறாய் !
பரவாயில்லை !.....
உன்..
இமைகள் சிமிட்டாமல்
என் கடிதத்தைப் படித்த !
உன் கண்களில் தெரிகிறது
என் காதல் !
அது போதும் எனக்கு .........