"மறந்து மறந்து போகும் நினைவு
திரும்பத் திரும்ப வரும் என கனவு !
அழிந்து போகும் உடலின் உள்ளே
அழிய மறுக்கும் உருவம் உனது !
ஓசை இல்ல பாடல் எனது
ஓசை மட்டும் உயிரே உனது !
ஆசை கொண்ட நெஞ்சம் எனது
ஆயில் கெடுக்கும் நேசம் உனது !
ஐயம் கொண்டே காதலைச் சொன்னேன்
ஐந்து நிமிட மௌனம் உனது !
"இல்லை" என்று நீயும் சொன்னால்
இருண்டு போகும் எந்தன் உலகு !"
Arumai arumai
ReplyDelete