சில சமயங்களில்..
மிகச்சிறந்த அறிவாளியாக
நான் செயல்படுகிறேன்!
சில சமயங்களில்..
அடி முட்டாளாக
நடந்துகொள்கிறேன்!
சில சமயங்களில்..
கருணையின் வடிவமாக
இருக்கின்றேன்!
சில சமயங்களில்...
கோபத்தின் உச்சத்தில்
ஊரிப்போகின்றேன்!
சில சமயங்களில்..!
வாரி வழங்குவதில்
வள்ளலாக திகழ்கின்றேன் !
சில சமயங்களில்...
கஞ்சம் செய்வதில்
மன்னனாகவும் ஆகின்றேன் !
.
.
.
.
என்ன செய்வது .....
இந்தக் காட்டு மிராண்டி கூட்டத்தில்
நானும் ஒருவன்தானே ! ........

No comments:
Post a Comment